நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசி பறித்த 3 பேரை தடாகம் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் கைது செய்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் வீடும் நிலமும் வாங்குவதாக கூறி,ஏமாற்றி 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறை தனிப்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.




கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சிவகுமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை பேபி என்ற மாயா (21) என்பவர் வீடு வாங்க வேண்டும் என்று அணுகியுள்ளார்.பின்னர், சிவக்குமார்இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டை காட்டியுள்ளார்.




அதன் பிறகு, பன்னிமடையில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறி, பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக சிவகுமாரை, பேபி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களான மோகனகிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோரை சம்பவ இடத்திற்கு வருமாறு பேபி அழைத்திருந்தார்.




இந்த நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி மாலை மூவரும் சேர்ந்து சிவகுமாரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசியை பலவந்தமாக பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடத்தி, வழக்கில் தொடர்புடைய பேபி @ மாயா, மோகனகிருஷ்ணன் மற்றும் கண்ணதாசன் ஆகிய மூவரையும் வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.






மேலும், குற்றவாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட 6 பவுன் தங்கச் செயின், கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...