தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை அறிக்கை தயாரித்துள்ளது.

Coimbatore:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான மூலதன நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தங்க விலை உயர்வால் நகை உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிர்வாகிகள் கூறுகையில், எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை உற்பத்தியாளர்கள் மூலதன பற்றாக்குறை மற்றும் நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்கப்படுவது தொழில்துறைக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, மாற்றீடு முறையை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அமல்படுத்துதல், கையிருப்பு மதிப்பு உயர்வை தனி கையிருப்பு கணக்கில் வரவு வைக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ICDS விதிகளில் சிறப்பு சலுகைகள் வழங்குதல், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கு ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சரக்கு மதிப்பீட்டிற்கு LIFO முறையை அனுமதித்தல் போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 140 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது FIFO மற்றும் Weighted Average Method முறைகளின் அடிப்படையில்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடிவதாகவும், இதனால் பல தொழில்முனைவோர் தங்களது மூலதனத்தையே பயன்படுத்தி வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, நகை உற்பத்தித் துறையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரிச்சட்டங்களில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், சங்கம் தயாரித்துள்ள கோரிக்கை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...