கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோசடி நடைபெறுவதாக எச்சரித்துள்ள கோவை மாவட்ட காவல்துறை, சந்தேக அழைப்புகள் குறித்து 1930-ல் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore:

கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நடைபெற்று வரும் போலி அழைப்புகள் மற்றும் இணைய மோசடிகள் குறித்து கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் அரசு அதிகாரிகள் அல்லது பள்ளி நிர்வாகத்தினர் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கச் செய்வதாகக் கூறி தொடர்பு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி (OTP) எண்கள் மற்றும் முன்பணம் உள்ளிட்ட தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசு அல்லது கல்வி நிறுவனங்கள் உதவித்தொகை பெறுவதற்காக பணம் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை யாருடனும் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உதவித்தொகை தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது இணைய மோசடி முயற்சிகள் குறித்து உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...