கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகளை பயன்படுத்திய வாகனங்கள் மீது கோவில்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து, அவற்றை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை-சக்தி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சில தனியார் பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை பாதிக்கும் வகையிலான உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த LED விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்து அபாயம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவில்பாளையம் போலீசார் இன்று சக்தி சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.



சோதனையில், விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து அவை அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.



விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விதிமீறல் உபகரணங்கள் மீது போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...