கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதன்படி, கோவை சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக (நிலம் எடுப்பு) இளங்கோவன், எம். பாண்டீஸ்வரன் மற்றும் கோவிந்தராஜு நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றவியல் (E.C.) நீதிமன்றத்திற்கு விஷ்ணு சித்தார்த், மகளிர் நீதிமன்றத்திற்கு அர்ச்சனா, 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு பிரேமலதா, 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு நிர்மலா, டான்பிட் (TNPID) நீதிமன்றத்திற்கு பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிவில் நீதிமன்றத்திற்கு கார்த்திகேயன், குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரபு ஸ்ரீகாந்த், எஸ்.சி./எஸ்.டி. வழக்குகளுக்கான சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு முத்துக்குமார், கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு பாலமுருகன், முன்சிப் நீதிமன்ற அரசு வழக்குப் பணிகளுக்கு தமிழ்வாணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்திற்கு தன்ராஜ், பொள்ளாச்சி முன்சிப் நீதிமன்றத்திற்கு ரங்கராஜன், சூலூர் முன்சிப் நீதிமன்றத்திற்கு விஜய் ஆனந்த், மதுக்கரை முன்சிப் நீதிமன்றத்திற்கு விக்னேஷ், மேட்டுப்பாளையம் முன்சிப் நீதிமன்றத்திற்கு வினோத், மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்திற்கு நவீன் குமார் மற்றும் அன்னூர் முன்சிப் நீதிமன்றத்திற்கு லதா மங்கேஷ் ஆகியோர் தற்காலிக அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் (Public Prosecutor), அரசு வழக்கறிஞர் (Government Pleader), முதல் மற்றும் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் ஆகிய பணியிடங்களுக்கு இதுவரை நியமனம் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நியமனங்கள், ஆறு மாத காலத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு காலவரையறை அடிப்படையில் அரசு சட்ட அலுவலர்கள் நியமிக்கப்படும் வரை, இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை தற்காலிக அடிப்படையில் செல்லுபடியாகும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக நியமனங்கள் மூலம் நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வழக்குகள் தொடர்ந்து தடையின்றி நடத்தப்படுவதுடன், அரசு சார்பிலான சட்டப் பணிகளில் நிர்வாக ரீதியான இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 6 ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், 8 வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சியருக்கு மொத்தம் ரூ. 62,000 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...