ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில் நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சாதனைகளை கொண்டாடி, தாய் நிறுவனத்துடனான உறவை வலுப்படுத்தினர்.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி (SREC) முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு (Second Global Alumni Meet) கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் சிறப்பாக நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற சுமார் 600 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும், தாய் கல்வி நிறுவனத்துடனான வாழ்நாள் உறவை மேலும் வலுப்படுத்துவதற்குமான சிறந்த தளமாக இந்நிகழ்வு அமைந்தது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீணா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். அவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டுகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இணைப்புகளில் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். கல்லூரி மற்றும் மாணவர்களின் உயர்த்துவதில் முன்னாள் மாணவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலருமான Dr. அ. சௌந்தரராஜன், SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார் மற்றும் TechGuard நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் கூட்டாண்மைத் துறைத் தலைவர் மார்க் மெலமேட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக Spotlight என்ற முன்னாள் மாணவர் இதழ் வெளியிடப்பட்டது. இந்த இதழில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் SREC முன்னாள் மாணவர்களின் சாதனைகள், வெற்றிக் கதைகள் மற்றும் இனிய நினைவுகள் இடம்பெற்றிருந்தன.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் மாணவர் உரையரங்கில், பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது தொழில்வாழ்க்கைப் பயணம், கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் கல்லூரி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்களுக்கு Alumni Excellence Awards வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியின் நிறைவாக, ஏற்பாட்டுக் குழுத் தலைவரான பேராசிரியர் Dr. வி. கற்பகம் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...