கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரியையும் தொடங்கி சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் மருத்துவர்களை GKNM உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரியை இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் ஆர். கோபிநாத், துணைத் தலைவர் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், நிர்வாகிகள், செவிலியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.



விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், செவிலியர் பணி என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளம் அல்ல என்றும், மனித சேவையை உயர்வாகக் கருதும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே செவிலியர் பணி இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மனித சேவையில் மிக உயர்ந்த பணிகளில் ஒன்றாக செவிலியர் சேவை விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாலேயே ஜி.கே.என்.எம். மருத்துவமனை உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளதாக பாராட்டினார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றியதுணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற அலுவல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குப்புசாமி நாயுடு விதைத்த சேவைச் சிந்தனைக்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் ஜி.கே.என்.எம். நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரியையும் தொடங்கி சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.



மலைவாழ் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை பிரச்சினைகள் இன்னும் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவ மற்றும் செவிலியர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், தமிழகத்தில் உறுப்பு தானம் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றி வருவது பாராட்டத்தக்கது என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 76 ஆயிரம் பேர் கண்தானம் செய்யும் இலக்குடன் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



மருத்துவத் துறையில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் பாரத், வயோ வந்தனா உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் வழங்கும் பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் ஆகியவற்றை எடுத்துக்கூறினார். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக சுகாதாரத் துறையின் முன்னேற்றம் முக்கிய பங்காற்றும் என்றும், அதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...