கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 12 துறைகள் பங்கேற்று 3963 பணியாளர்கள் பலன் பெற்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இந்த முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS முன்னிலை வகித்தார்.

இன்று காலை 10 மணி முதல் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் வருவாய்த்துறை, திறன் மேம்பாட்டு பயிற்சி நிருவனம், பள்ளிக் கல்வித்துறை, மருத்துவத்துறை, தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



பங்கேற்ற துறை அலுவலர்கள் தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் ESI, PF தொடர்பாகவும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் 3963 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்துகொண்ட பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), வே.கதிர்வேல் (வடக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), சுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ஆண்டியப்பன், குணசேகரன், ராஜேந்திரன், உதவி பொறியாளர் மஞ்சுளா தேவி, சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், விஜயகுமார், சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...