கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் என்பவர் கடந்த எட்டு நாட்களாக விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்ட ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

நம்பர் 10 முத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். எட்டு நாட்களாக நீடித்த அவரது போராட்டத்திற்கு விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.



விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகளால் கிணத்துக்கடவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குவாரிகளில் அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகம், தாசில்தார், வருவாய்த்துறை என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

போராட்டம் பரவலான கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, நேற்று சார் ஆட்சியர் தலைமையில் எட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 5 குவாரிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கல்குவாரிகளின் செயல்பாடு மற்றும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.



அந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு கல்குவாரிகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...