தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பள்ளிக் கட்டணங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக கோவை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.

கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர்கள் அதிக நம்பிக்கையுடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாக கூறினார்.

“அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வலுப்படுத்தும் நோக்கில், ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கேற்ப கணினி அறிவியல் பயிற்றுநர்கள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து, தேவையான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்கள், குறிப்பாக கழிப்பறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு தற்போது வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லாததால் சில இடங்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு, பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு நிதியை உயர்த்த முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், தற்போது இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது,” என்றார்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்தார்.

Newsletter

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...