கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்டும் சந்தித்து கோவைக்கு அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனுடன் கோவை திரும்பிய தாய் மற்றும் மகனை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

கோவை: கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்டும் சந்தித்து கோவைக்கு அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு பிழைப்புத் தேடி சுந்தரி தனது இரு மகன்களுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு குடிபெயர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், 2003-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் பிரகாஷ் திடீரென காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல ஆண்டுகளாக தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பிரகாஷ் பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டிருந்ததும், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவர் சமீபத்தில் மீட்கப்பட்டதும் தெரியவந்தது.

பிரகாஷை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தேவையான அரசு ஆவணங்களைப் பெறுவதற்காக சுந்தரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரகாஷ் கோவையில் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் விரைவாக தயாரிக்கப்பட்டன.

அந்த ஆவணங்களுடன் பஞ்சாப் சென்ற சுந்தரியிடம், அங்குள்ள அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்த பின்னர் பிரகாஷை ஒப்படைத்தனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனை நேரில் பார்த்த சுந்தரி, கண்ணீருடன் அவரை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டார்.

மகனுடன் கோவை திரும்பிய சுந்தரியை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுந்தரி கூறுகையில், "23 ஆண்டுகளாக வடித்த கண்ணீருக்கும், இறைவனிடம் வைத்திருந்த நம்பிக்கைக்கும் இன்று பலன் கிடைத்துள்ளது. என் மகன் எங்கோ உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையை ஒருநாளும் இழக்கவில்லை. என்னைப் பார்த்தவுடன் அவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். யாரோ சிலர் கொத்தடிமையாக வைத்துக் கொடுமைப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீட்கப்பட்டதாகவும் கூறினான். என் மகனை மீண்டும் என்னுடன் சேர்க்க உதவிய மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர் முத்தையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...