வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். குப்பை மேலாண்மையில் சிறப்பான செயல்பாட்டை பொதுமக்களும் ஆற்றினர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தின் வார்டு எண் 36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் குப்பை மேலாண்மையில் சிறப்பான பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேற்கு மண்டல அலுவலகத்தில் இன்று (31.07.2026) நடைபெற்ற நிகழ்வில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்ட இரண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வடவள்ளி பகுதியில் இப்பணியை சிறப்பாக செய்த தூய்மைப் பணியாளர்கள் கலைமணி மற்றும் முருகம்மாள் ஆகியோருக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.



இப்பணிகளை திறம்பட கண்காணித்த சுகாதார மேற்பார்வையாளர் முருகன்மற்றும் ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர் கனகராஜ்ஆகியோருக்கும் மாநகராட்சி ஆணையர் பாராட்டுதல்கள் வழங்கினார். மேலும், வார்டு எண் 36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் நர்மதா, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி செயற்பொறியாளர் மண்டல சவிதா, சுகாதார இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

குப்பை மேலாண்மையில் தரம் பிரித்தல் முறை மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய மாநகராட்சி ஆணையர், இதுபோன்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் ஊக்குவித்தார். பொதுமக்களும் குப்பைகளை ஆதாரத்திலேயே தரம் பிரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...