விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி முதல்வர் Vijay பயிர்க்கடனை முழுமையாக நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர். குறைதீர்க் கூட்ட அரங்கில் முழக்கமிட்டதால் காவல்துறையினரிடம் மோதல் ஏற்பட்டது.


Coimbatore: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கோவையில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.






தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழக முதல்வர் Vijay பயிர்க்கடனை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.






ஆட்சியர் அலுவலக வளாகத்தின் குறைதீர்க் கூட்ட அரங்கிலேயே விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்ற முற்பட்டனர். முழக்கங்களை எழுப்பியபடி விவசாயிகள் வெளியே வந்துகொண்டிருந்தபோது காவல்துறையினர் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது.




இதனால் கடும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். "எங்களது கோரிக்கைகளைக் கூறுவதற்கான பிரத்தியேக நாளில் எங்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பி காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.




இதனையடுத்து சிறிது நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாயிகள் வெளியே வந்து ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையில் கருப்புத் துண்டு கட்டியபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.




விவசாயிகளின் இந்தப் போராட்டம் தமிழக அரசின் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்துகிறது என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...