கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.


Coimbatore: கோவை வடவள்ளி கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




கோவை, வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பிரபா நகர், அஷித்ரா அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி (வயது 38). இவர் கஜேந்திரனின் மனைவி. பாக்கியலட்சுமியின் பெற்றோர் வடவள்ளி கல்வீரம்பாளையம், S.P.K நகர் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.




கடந்த 11-ஆம் தேதி பாக்கியலட்சுமியின் பெற்றோர் ராஜபாளையத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். வீட்டைப் பராமரிப்பதற்காக பாக்கியலட்சுமி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி, கடந்த 28-ஆம் தேதி பிற்பகல் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து விட்டு பூட்டிச் சென்றார்.




நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி மீண்டும் வீட்டைப் பார்க்க வந்தபோது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது.




லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1½ சவரன் தங்க தோடு, 1 சவரன் எடைகொண்ட 4 ஜோடி சிறிய தோடுகள், ¾ சவரன் பவள தோடு, 2 சவரன் தங்க வளையல்கள், 1 சவரன் தங்க நாணயம், 1 சவரன் மூக்குத்தி என மொத்தம் 4¾ சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் 1 வெள்ளி கொடி, 4 வெள்ளி தண்டைகள் மற்றும் 3 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தன.




யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது உறுதியானது. இது குறித்து பாக்கியலட்சுமி வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




அத்துடன் அப்பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெறிச்சோடிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால், வீட்டை விட்டு வெளியூர் செல்பவர்கள் அண்டை வீட்டாரிடம் தெரிவித்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...