வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொறுப்பாளர் மகுடீஸ்வரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பேருந்துகள் வழிமறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக தொண்டர்கள் காந்தி சிலை வளாகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.






தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வால்பாறை காந்தி சிலை வளாகம் அருகில் திமுக இளைஞரணி பொறுப்பாளர் மகுடீஸ்வரன், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் ஜே பி பாஸ்கர், நகர துணை செயலாளர் பிரபாவதி மற்றும் சரவண பாண்டியன் ஆகியோர் தலைமையில் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.






இந்நிகழ்வில் மகுடீஸ்வரன், செந்தில்குமார், கவுன்சிலர் பாஸ்கர், பிரபாவதி, கதிரேசன், சின்னச்சாமி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் கைது மற்றும் தொண்டர்கள் மீதான நடவடிக்கையால் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...