தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவை மாநகர B3 வி.எச். ரோடு புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு பதிவான 100 கிராம் தங்க நகை வழிப்பறி வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அசோக் நகரைச் சேர்ந்த செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், அவரது ஊழியரிடம் 100 கிராம் தங்க நகையை கொடுத்து பொன்னையராஜபுரத்தில் உள்ள குளோபல் நக்ஷத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரிடம் ஒப்படைக்க அனுப்பியிருந்தார். அப்போது, குடியிருப்பு அருகே வந்தபோது இருவர் கத்தியை காட்டி 100 கிராம் தங்க நகையை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் B3 வி.எச். ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வலையபன் மற்றும் தெளபீக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, வழக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல் குற்றவாளியான வலையபன் 2023-ஆம் ஆண்டு உயிரிழந்ததால், இரண்டாவது குற்றவாளியான தெளபீக் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம், தெளபீக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...