கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர். பிஸ்டல் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.


Coimbatore: சென்னை குருநானக் கல்லூரி பயிற்சி மையத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் சிறப்பான வெற்றி பெற்று மொத்தம் 168 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.



10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ரைபிள் கிளப்புகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் ரைபிள் அசோசியேஷன் சார்பில் அசோசியேஷன் செயலாளரும் சீனியர் ஷூட்டருமான Venkatasalam தலைமையில் ரைபிள் பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படி சுமார் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் 40 தங்கம், 18 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களை வென்றனர்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில் பயிற்சியாளர் Arun தலைமையில் 23 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 41 தங்கம், 28 வெள்ளி, 16 வெண்கலம் என 85 பதக்கங்களை வென்றனர்.



மேலும் பிஸ்டல் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கோவை பிஸ்டல் வீரர்கள் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இருந்து 60 வீரர்கள் தென் மாநில அளவிற்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா கோவை ரைபில் கிளப் மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை ரைபில் கிளப் அசோசியேஷன் செயலாளரும், சர்வதேச ரைபில் பயிற்சியாளருமான Venkatasalam, அசோசியேஷன் துணை செயலாளர் Aparna Vasanth Kumar, அசோசியேஷன் பொருளாளர் Manivanan உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற வீரர்களையும் பயிற்சியாளர்கள் Arun மற்றும் Prem Sai ஆகியோரை பாராட்டினர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...