இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று அதிகாலையில் வீடு புகுந்து தாய் மற்றும் மகள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் விவகார எதிர்ப்பு காரணமாக நடைபெற்றதாக கூறப்படும் இக்கொலை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்ற நபரை பல்லடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி தனலட்சுமி மற்றும் மகள் பூவரசியுடன் வசித்து வந்துள்ளார். பழனிச்சாமியும் தனலட்சுமியும் பனியன் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த நிலையில், அவர்களது மகள் பூவரசி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை பழனிச்சாமி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த தனலட்சுமியும் பூவரசியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, போலீசாரிடம் சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பூவரசி மற்றும் அக்ஷய் பழகி வந்தது தொடர்பாக தாய் எதிர்ப்பு தெரிவித்து, தனது மகளை கண்டித்ததாகவும்

இதையடுத்து பூவரசி தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய், சம்பவத்தன்று காலை பூவரசியின் வீட்டிற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூவரசியையும் அவரது தாய் தனலட்சுமியையும் வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்ஷயை கைது செய்த பல்லடம் போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அரிவாளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்குள் புகுந்து தாய் மற்றும் மகளை காதலனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பச்சாபாளையம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...