சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சரவணம்பட்டியில் மினி லாரி ஒன்றின் உள்ளே டிரைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜு (வயது 53). இவர் தற்போது கோவை சரவணம்பட்டி சிவராம் நகர் ஆடி வீதியில் தங்கி, சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.




இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற ராஜு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே அவரது மினி லாரி நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடப்பதாக, அவ்வழியாகச் சென்றவர்கள் அவரது மகன் அன்பரசனுக்கு (23) செல்போனில் தகவல் தெரிவித்தனர்.




தகவல் அறிந்த அன்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, லாரியின் டிரைவர் இருக்கையில் அவரது தந்தை ராஜு அசைவற்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்தார். வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில் ராஜு ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதியானது.




தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் ராஜுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜு எவ்வாறு உயிரிழந்தார், மர்ம மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...