கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந்துள்ளது. கணக்கெடுப்பாளர்கள் வராத வீடுகளுக்கு மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.


Coimbatore: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டுப் பட்டியல் பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் தொடங்கிய இப்பணிகள், ஆகஸ்ட் 17 வரை 61 சதவீதம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரு கட்டங்களாக நடைபெறும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (House Listing Census) பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 39 சதவீத பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுவரை கணக்கெடுப்பாளர்கள் (HLO) வராத வீடுகள் அல்லது விடுபட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்குரிய மாநகராட்சி மண்டல அலுவலக அதிகாரிகளை (Zone Nodal Officers) தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.


மேற்கு மண்டலத்திற்கு (West Zone) தொலைபேசி எண் 0422-2551700, கைபேசி எண் 7395922972, மத்திய மண்டலத்திற்கு (Central Zone) தொலைபேசி எண் 0422-4709525, கைபேசி எண் 7871981000, வடக்கு மண்டலத்திற்கு (North Zone) தொலைபேசி எண் 0422-2243133, கைபேசி எண் 9943535360, கிழக்கு மண்டலத்திற்கு (East Zone) தொலைபேசி எண் 0422-2577217, கைபேசி எண் 8925975839, தெற்கு மண்டலத்திற்கு (South Zone) தொலைபேசி எண் 0422-2252705, கைபேசி எண் 8925975904 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.


கணக்கெடுப்பு அலுவலர்கள் அனைவரும் மாநகராட்சி வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை (Identity Card) அணிந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டின் முகவரி, சுவர்களின் தன்மை, கூரை வகை, குடிநீர் ஆதாரம், கழிப்பறை வசதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற முதற்கட்ட விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


சேகரிக்கப்படும் தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாநகராட்சி உறுதியளித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கோவை மாநகர மேம்பாட்டுத் திட்டங்களைச் சரியாகத் திட்டமிடவே இத்தரவுகள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.


பொதுமக்கள், கணக்கெடுப்பு அலுவலர்கள் (Enumerators / Supervisors) தங்கள் இல்லங்களுக்கு வரும்போது, அவர்கள் கேட்கும் விவரங்களைச் சரியாக வழங்கி, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு நகர மேம்பாட்டுக்கு அடிப்படையாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...