கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி பேருந்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி பேருந்து உதவியாளர் சேவியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பல்வேறு வழித்தடங்களில் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட வழித்தடத்தில் பணியாற்றி வந்த பேருந்து உதவியாளர் சேவியர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று காலை குறிப்பிட்ட பகுதிக்கு வந்த பள்ளி பேருந்தை மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாம்பூர் போலீசார், பேருந்து உதவியாளர் சேவியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், பள்ளி பேருந்து உதவியாளர் சேவியருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் சேவியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...