கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (22.08.2026) மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 700 சமூக நாய்களுக்கு Anti-Rabies Vaccination (ARV) செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 8,000 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 36, 37, 38 ஆகிய பகுதிகளிலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 8 மற்றும் 54 ஆகிய பகுதிகளிலும் உள்ள சுமார் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளுடன், விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு (ABC), தொடர்ச்சியான தடுப்பூசி பணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம், "ஒருங்கிணைந்த நலன் One Health" என்ற அணுகுமுறையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் வெறிநோய் இல்லாத நிலையை (Zero Rabies by 2030) அடைவதை இலக்காகக் கொண்டு, கோவை மாநகராட்சி தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...