கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பங்கேற்றனர். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவது குறித்து சிறப்புரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் (Women Empowerment Cell) தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) காலை நடைபெற்றது. கல்லூரியின் IAS அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் M.R. எழிலி தலைமை வகித்தார். தனது உரையில், நவீன காலத்தில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கல்லூரிகளில் இதுபோன்ற அமைப்புகள் செயல்படுவது மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.



தொடர்ந்து, கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியர் முனைவர் S. சித்ரா, பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த Point Perfect Technology Solutions நிறுவனத்தின் HR மேலாளர் G.S. கிஷோர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தனது உரையில், கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்து அவர் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து முனைவர் ஏ. மாலதி மேம், பெண்கள் அதிகாரம் மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் மன உறுதி, பொருளாதார சுதந்திரத்தின் அவசியம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து அவர் பேசினார். மாணவிகள் சுயமரியாதையுடனும் இலட்சியக் கனவுகளுடனும் தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், முதலாம் ஆண்டு கணினி அறிவியல் முதுகலை மாணவி பவி வர்ஷினி R நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் தொடக்க விழா நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...