இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல் 25 வயதுக்குட்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட மாணவர்கள் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் பங்கேற்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.


Coimbatore: ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறவுள்ள உலகத்திறன் போட்டிகளில் (World Skills Competition) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் (India Skills Competition) 2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

இந்தியத்திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. World Skills Shanghai China 2026-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

இப்போட்டியின் மூலம் இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. மாவட்ட, மாநில, மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு உலகத் திறன் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும்.

16 முதல் 25 வயதுக்குட்பட்ட (திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும்) கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இதர கல்வி நிறுவன மாணவர்கள், இளம் தொழில்முனைவோர் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியானவர்கள் https://www.skillindiadigital.gov.in/india-skills.competition என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. போட்டிகள் தொடர்பான இதர விவரங்களை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டத்திறன் பயிற்சி அலுவலகம், கோயம்புத்தூர்-29, தொலைபேசி: 9488462613 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...