கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்ற வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி அகற்றி செலவை வசூலிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்ற தனியார் நில உரிமையாளர்களுக்கு 10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகமே அகற்றி அதற்கான செலவை நில உரிமையாளரிடம் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P(MD) எண். 16485/2015, 14699/2015 மற்றும் W.P எண். 3075/2017 ஆகிய வழக்குகளில் 21.08.2026 தேதியிட்ட தீர்ப்பின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.




இந்நிலையில், தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அந்தந்த நில உரிமையாளர்கள் தாங்களாகவே இந்த அறிவிப்பு வெளியாகும் நாளிலிருந்து 10 நாட்களுக்குள் வேருடன் முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.




இதனை நில உரிமையாளர்கள் செய்யத் தவறினால், மாநகராட்சி நிர்வாகமே இந்த சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும். மேலும் அதற்கான முழு செலவினத்தையும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சீமைக் கருவேலமரம் ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட வெளிநாட்டு இனமாகும். இது வேகமாக வளர்ந்து நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் இயல்பு கொண்டது என்பதால் இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் அகற்றி, சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...