கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்ற வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி அகற்றி செலவை வசூலிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்ற தனியார் நில உரிமையாளர்களுக்கு 10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகமே அகற்றி அதற்கான செலவை நில உரிமையாளரிடம் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P(MD) எண். 16485/2015, 14699/2015 மற்றும் W.P எண். 3075/2017 ஆகிய வழக்குகளில் 21.08.2026 தேதியிட்ட தீர்ப்பின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.




இந்நிலையில், தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அந்தந்த நில உரிமையாளர்கள் தாங்களாகவே இந்த அறிவிப்பு வெளியாகும் நாளிலிருந்து 10 நாட்களுக்குள் வேருடன் முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.




இதனை நில உரிமையாளர்கள் செய்யத் தவறினால், மாநகராட்சி நிர்வாகமே இந்த சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும். மேலும் அதற்கான முழு செலவினத்தையும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சீமைக் கருவேலமரம் ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட வெளிநாட்டு இனமாகும். இது வேகமாக வளர்ந்து நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் இயல்பு கொண்டது என்பதால் இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் அகற்றி, சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...