சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பிடித்தம் செய்ததாகக் குற்றம்சாட்டி, பிடித்தம் செய்யப்பட்ட ₹1,000 முதல் ₹3,000 வரையிலான தொகையைத் திரும்ப வழங்கக் கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், எலக்ட்ரீசியன்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து ₹1,000 முதல் ₹3,000 வரை இ.எஸ்.ஐ., பி.எப். பங்களிப்புத் தொகை என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அலுவலரிடம் கேட்டபோது, இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகை மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டதாகவும், டேமேஜ் மற்றும் அபராதத் தொகை எதுவும் பிடித்தம் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்ததாகத் தெரிவித்தார்.



ஆனால், இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையைப் பொறுத்தவரை, அந்தந்த மாதத்துக்குரிய தொகையை மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும்; மொத்தமாகப் பிடித்தம் செய்யக் கூடாது என்ற விதி உள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறு தவறாகப் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திரும்ப வழங்கக் கோரி, கடந்த ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பதிவாளரிடம் முறையிட்டதாகவும், அப்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப வழங்குவதாகவும், இனி சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



மேலும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கான பொங்கல் போனஸை வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கான இரண்டு மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பாங்க் ஆஃப் இந்தியா மூலம் தொழிலாளர்களுக்கு தனிநபர் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் ரமேஷ் குமார் தெரிவித்தார்.



குறிப்பாக, டெலிபோன் ஆபரேட்டர் மோகன்ராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், டெலிபோன் ஆபரேட்டராகப் பணியாற்றிய மோகன்ராஜ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தற்போது தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மோகன்ராஜை உடனடியாக நிதி அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முறையிட்டதால், தொழிலாளர் நலச் சங்க பொதுச் செயலாளரான தன்னை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும், அதேபோல் சங்கத் தலைவர் சிந்தாமணியும் உரிய உத்தரவு கடிதம் வழங்கப்படாமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை 400-க்கும் மேற்பட்ட தொகுப்பூதியப் பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...