சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல். மேலும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற தம்பதி கைது. 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சரவணம்பட்டி பகுதியில் அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 27.8 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சரவணம்பட்டி எஃப்.சி.ஐ குடோன் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை எண் 1550-ன் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் தலைமையில் போலீசார் குழு நேற்று அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியது.

சோதனையின் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து பெரும் அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மரக்காத்தூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது.

கண்ணன் தற்போது சரவணம்பட்டி டாஸ்மாக் பாரில் தங்கி இருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தார் என்பதும் விசாரணையில் வெளியானது. அவரிடம் இருந்து ஹான்ஸ் 16.2 கிலோ, கூல் லிப் 6.760 கிலோ, சுவாகத் கோல்ட் 4.6 கிலோ, வி1 புகையிலை 268 கிராம் என மொத்தம் சுமார் 27.8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணனைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆர் மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் செல்விக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்த போது, அங்கு நின்று இருந்த ஒரு ஆணும் பெண்ணும் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கோவை சாயிபாபா காலனி கருணாநிதி நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (வயது 30) மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி (வயது 29) என்பது தெரியவந்தது. இவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்த 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தம்பதி இருவர் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாயிபாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...