குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதி மக்களுக்கு குலுக்கல் முறையில் வீடு

கோவை மாநகரத்தில், குளம் மற்றும் நீர்வழித்தட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாநகரத்தில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், கோவையில் உக்கடம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர் குறிச்சி மலை, கோவைபுதூர் அண்ணாநகர், மலைநகர் ஆகிய இடங்களில், எட்டாயிரத்துக்கும் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. குறிச்சி குளம், வெள்ளலூர் ராஜவாய்க்கால், சங்கனூர் பள்ளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு மே 3 ஆம் தேதியன்று (நாளை) குலுக்கல் முறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒத்துக்கப்படுகின்றன.

அதன்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் மூலமாக, வெள்ளலூரில் 2,186, மலுமிச்சம்பட்டியில் 1,460, மதுக்கரை அண்ணாநகர் 960, மலைநகரில் 224 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 1,750 பேர் வசிப்பது உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு நாளை (மே 3) குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக மற்ற நீர்நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கும் வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...