திருநங்கைகளுக்கு திருநங்கைகளே தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையை சேர்ந்த திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கு வர சில திருநங்கைகள் வற்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த திருநங்கை பூர்நித்தா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநங்கைகள் ஜமாத் என்ற அமைப்பில் திருநங்கைகளை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு நன்முறையிலான பல பணிகளை திருநங்கைகளாகிய நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும், தங்களை பாலியல் தொழிலுக்கு வரவும், எந்தவித புதிய அமைப்பும் தொடங்கக்கூடாது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. 

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திம், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...