நிலகிரியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் உட்பட 30-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இரசயல் கட்சியினர் என பலதரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காரைகொர்ன், ஜெகதளா தினட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் இதுவரை அப்பகுதியிலிருந்து கடையை அகற்றவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று டாஸ்மாக் கடை முன்பு தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் தலைமயில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், காவல்துறையினரின் தடைகளை மீறி தமிழ் மாநில இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் உட்பட 30-க்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் மீது அக்கறையின்றி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவழக்குகளில் சம்மந்தப்பட்ட டிடிவி தினகரனை சந்திப்பது கண்டனத்துக்குறியது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும் என கூறினார்.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...