வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘சர்வதேச யோகா தினம்’

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் யோகா மன்றத்தின் சார்பில் ‘சர்வதேச யோகா தினம்’ இன்று பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் முன்னிலை வகித்தார்.



ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி விருது’ பெற்ற 98 வயதான நானம்மாள் அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவி கே.ரோஷினி பெனாசிர் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, மாணாக்கர் முன்னிலையில் யோகா ஆசிரியை நானாம்மாள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். ஓசோன் யோகா மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் ஒவ்வொரு ஆசனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இதில், மாணவ, மாணவியரும் பல்வேறு சந்தேகங்களை விருந்தினரிடம் கேட்டறிந்தனர். சில கடுமையான யோகாசனங்களை தனது 98 வது வயதிலும் மிக சுலபமாக செய்து காட்டியவரை, மாணாக்கரும், ஆசிரியரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் நானம்மாள் முன்னிலையில் மாணாக்கர் தினமும் யோகா செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையையும் மற்றும் சர்வதேச அளவில் தனது மாணவர்கள் 117 தங்கப்பதக்கங்களைப் பெற்ற பெருமையையும், நானம்மாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் பெருமைமிகு தொன்மையான யோகா கலையை பரப்பும் நற்செயலுக்காக, பள்ளியின் சார்பாக நானம்மாள்-க்கு ‘கோவையின் பெருமை’ என்ற விருதை வழங்கி பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் அவர்கள் கௌரவப்படுத்தினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...