தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தயாரிப்பு தேதி, விலைப்பட்டியில் எதுவும் குறிப்பிடாமல் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை தடாகம் ரோடு கோவில்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான திண்பண்ட கடைகள் இயங்கி வருகிறது. இவைகளில் பல கடைகளில் தரமற்ற திண்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்படுவதாகவும் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் திண்பண்டங்கள் விற்பனை செய்யபடும் பல கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கபடுகிறது. பாக்கெட்டுகளில் விலைபட்டியில், தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி இவை எதுவுமே குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு பொருட்கள் உட்கொள்வதால் உடல் நல கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான திண்பண்டங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...