கோவையில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர். இதில் இதுவரை வாரந்தோறும் அதிக அளவிலாக 500க்கும் மேற்பட்ட தனார்வலர்கள் கலந்து கொண்டு இப்பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி இந்தியா நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தூய்மை பணியை செய்து வருகின்றனர். 



இதனை தொடர்ந்து, இருபதாவது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் அணையை மீட்டெடுக்கும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு களம் காண உள்ளனர். கோயமுத்தூர் திருப்பணையின் மூலமாக உக்கடம் குளத்திற்கு நீர் வரும் அணைகளில் முக்கிய அணையாகும். இவ்வணை சுமார் 530 அடி கொண்டது தற்போது 200 அடி வரை அணை முழுவதும் புதர் மண்டி நிரம்பி உள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்! 



இடம்:பேரூர் தமிழ் கல்லூரி அருகில், நொய்யல் ஆற்று பாலம்.

நாள்:25/06/2017

நேரம்:காலை 7.00 முதல் 9.00வரை

ஒருங்கிணைப்பு:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு:8015714790, 94432 37422, 9789143103, email:[email protected]

குறிப்பு: 

முழுவதும் புதர்மண்டி இருப்பதால் தன்னார்வலர்கள் தாங்கள் வரும்பொழுது கொத்து,மண்வெட்டி, அருவாள் கொண்டு வரவும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...