கோவையில் வெள்ளி வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி வெள்ளி, பணம் கொள்ளை

கோவை மாவட்டம், வைசியால் வீதியில் சேலத்தை சேர்ந்த சண்முகராஜன் என்பவர் வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று அங்கு வந்த சில மர்ம நபர்கள் சண்முகராஜன் மீது மிளகாய் பொடியினை வீசியுள்ளனர்.

இதனால், சண்முகராஜன் நிலைதடுமாறிய நிலையில் அந்த மர்ம நபர்கள் அவரது கையில் இருந்த வெள்ளி கட்டிகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் 92 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜவீதி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடு போன 92 ஆயிரம் பணம் உட்பட வெள்ளி பொருட்களின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் ஆகும்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...