என் வழி தனி வழி, என் அப்பா வழி தனி வழி - கோவையில் நடிகர் கவுதம் கார்த்திக் பேச்சு

கோவை சாந்தி திரையரங்கில் ‘இவன் தந்திரன்’ படக்குழுவின் நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் ‘இவன் தந்திரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரய்லர் திரையிடப்பட்டது. ‘இவன் தந்திரன்’ படத்தின் படக்குழுவினர்களுடன் ரசிகர்களும் பாடல்கள் மற்றும் ட்ரய்லரை கண்டு ரசித்தனர்.



‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாகவும், அர்ச்சனா ஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு வி.என்.மோகன், அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.



முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக்; "நான் தமிழ் படத்தில் இயக்குநர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். தமிழ் படத்தில் நான் நடிக்க எனது அப்பா முக்கிய காரணம். அப்பாவின் நடிப்பு வேற ட்ரெண்ட், நான் இன்னும் அவருக்கு சமமாக படங்களில் நடிக்கவில்லை. அவர் கூட நடிக்க நான் இன்னும் வளரனும்.

என்னோட ட்ராக்ல தான் நான் நடிகனும், அதுதான் அவரோட ஆசையும். தமிழ் படத்தில நான் இன்னும் பெரிய அளவில் சக்ஸஸ் பண்ணல, தமிழ் படத்தில் நடிக்கும் முன்பு மக்கள் மைண்ட்செட் எப்படி இருக்குனு புரிந்து நடிக்கனும், அது புரியாம தான் நான் நடித்த படம் பெரிய அளவில் ஓடவில்லை.

தற்போது ‘இவன் தந்திரன்’ படத்தில் தமிழ் மக்களுக்கு பிடித்த மாதிரி கதை கிடைத்துள்ளது. இந்த படம் முழுதும் சென்னையில் எடுக்கப்பட்டது. மழையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடி, செண்டிமெண்ட், கமர்சியல் எல்லாம் இருக்கு. இந்த படத்திற்கு பிறகு எனது அடுத்த படம் இந்திரஜித் வெளிவர உள்ளது. ‘இவன் தந்திரன்’ படம் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க சிறந்த படமாக இருக்கும்" என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...