முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இரு குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மறுவேலைவாய்ப்பு அடிப்படையில் குடிமைப்பணியில் வேலைவாய்ப்பு பெற்று குடிமைப் பணிக்கான ஓய்வூதியம் பெற்று உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவிரர்களின் கைம்பெண்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு இராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் குடிமைப்பணியில் பணியாற்றியமைக்கான குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டள்ளது.

2013 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு, குடிமைப்பணியில் மறுவேலைவாய்ப்பு பெற்று பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்பு ஓய்வூதியம் பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த குடிமைப்பணியில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் இவ்வரசாணையின்படி முன்னாள் படைவீரர்கள் பணியாற்றிய குடிமைப்பணி துறையினை அணுகி குடும்ப ஓய்வூதியம் குறித்தான கருத்துருவினை மாநில கணக்காயருக்கு பரிந்துரை செய்து பயனடையலாம்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், 0422- 2214107 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது நேரில் தொடர்புகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...