ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மரம்நடு விழா

கோவைப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரம் நடு விழாவும், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியும் நடத்தப் பெற்றன. மரம் நடுதல் வாரத்தின் இறுதி நாளினை முன்னிட்டுக் கல்லூரியின் மைதானத்தைச் சுற்றிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் களப் பணியாளர்கள் மரம் நடுதலைத் தொடங்கினர். 

இதனை முன்னிட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து ‘வனதேவதை’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தியது. போட்டியில் மிகுதியான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் வி.இராதிகா மரம் நடுதலைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் க.பாலாஜி மரம் நடுதலிலும் இலக்கியப் போட்டியிலும் கலந்து கொண்டவர்களைச் சிறப்பித்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...