ஜிஎஸ்டி வரி உயர்வால் லட்சக் கணக்கில் தேங்கிய நீலகிரி தேயிலைகள்


மழைகளின் இளவரசியான உதகையில் அதிகப்படியான தேயிலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேயிலைகள் இந்தியா முழுக்க மற்றுமின்றி உலகத்தின் பெரும்பகுதிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையும், குறிப்பாக உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ தேயிலை பயனற்ற நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.



தற்போது நீலகிரியில் தேங்கிக் கிடக்கும் தேயிலைகளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஜூலை 1ம் தேதியன்று உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியே என இச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் கூறுகையில், நீலகிரியில் குறிப்பாக குன்னூர் பகுதியிலேயே தேயிலை விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இத்தொழிலை நம்பி ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேயிலை ஏற்றுமதியின் போது குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும். ஆனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் இடைத்தரகர்களுக்கு எதன் அடிப்படையில் கமிஷன் தொகை தருவது என குழப்பம் நீடித்து வருகிறது.



இவ்வாறு உதகையில் தேயிலைத் தொழிலை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூலை 21ம் தேதி முதல் தேயிலைச் செடியில் இருந்து புதிதாக தேயிலை பறிக்கும் பணி நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இத்தொழிலை நம்பியுள்ள நீலகிரி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...