கோவையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 320 கோடி மதிப்பில் புறவழி சாலை- நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு


கோவை, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை ரூ.168 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தடையின்மை சான்று கேட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும், உடனடியாக 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. ஒப்பந்தம் இறுதியாகும் நாளில் இருந்து, நான்கு மாதத்துக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், அரசுத் தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்படுவர். ஓராண்டுக்குள் பாலம் கட்டுமான பணி துவக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை நகருடன் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகள் இணைகின்றன. ஆறு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் நுழைந்து மற்றொரு பகுதிக்கு செல்வதால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓரிடத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வீணாகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகள் முடிவு செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 



இதில், மேட்டுப்பாளையம் சாலை - சத்தி சாலை - அவிநாசி சாலை - திருச்சி சாலையை இணைக்கும் வகையில் அரைவட்ட சாலை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது. குனியமுத்துாரில் இருந்து மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரை சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையும் வகையில் ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு எந்தெந்த இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிற கள ஆய்வில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...