விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆலோசனை


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலங்களின் போதும் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். சிலை வைக்கும் அமைப்பினர் உரிய காவல்துறை அனுமதி பெற்று 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்துள்ள கரையக்கூடிய சாயத்தை மட்டுமே பூசி இருக்க வேண்டும். காகிதக்கூழ் மற்றும் களி மண்ணால் ஆன சிலைகள் வைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்களில் சிலை செய்து வைத்து விற்பனை செய்ய கூடாது. இதை கண்காணித்து தேவையான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் பேசுதல் கூடாது. ஊர்வலங்கள் செல்லும் போது ஒலி எழுப்புவதோ, மேளங்கள் அடிப்பதோ, கோஷங்கள் போடுவதோ கூடாது. ஊர்வலத்தில் தடி,கம்பு மற்றும் ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது. பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்க கூடாது. சிலைகள் கரைக்கப்படும் குளங்களில் போதிய வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்க மின்வாரியமும், மாநகராட்சியும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள்; 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் ஒரு சிறு சம்பவங்கள் கூட இல்லாத வகையில் இந்த விழா நடைபெற அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...