வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு பகுதியில் 7 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை தாக்கிய 7 பேரை பந்தையசாலை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், கார்த்திக், சக்திவேல் மற்றும் அருண்பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...