"7 நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு நிவாரணம்"- கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

7 நாட்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமென கூறி கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் சன் லைப் ஹெல்த் சொல்யூசன் என்ற பெயரில் ராபர்ட் சாக்கோ என்பவர் மருத்துவம் பார்த்து வந்தார். இவர் இயற்கை மருத்துவ முறையில் நானோ தொழில் நுட்பத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமென விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் 3 முதல் 7 நாட்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமெனவும், 30 நாட்களில் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் செயழிலப்பு, இருதய அடைப்புகள் சரி செய்யப்படுமெனவும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோவை மண்டல சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகர் சோதனை மேற்கொண்டதில் ராபர்ட் சாக்கோ பிஏ பொருளாதாரம் படித்து விட்டு, மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராபர்ட் சாக்கோவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மண்டல சுகாதார பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகர் கூறுகையில், "டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் எழுந்துள்ள அச்சத்தை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக பணம் வசூலித்து வருகின்றனர். இதுபோன்ற மருத்துவர்களிடம் சென்று ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் டெங்கு நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், நடப்பாண்டில் இதுவரை 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...