"7 நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு நிவாரணம்"- கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

7 நாட்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமென கூறி கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் சன் லைப் ஹெல்த் சொல்யூசன் என்ற பெயரில் ராபர்ட் சாக்கோ என்பவர் மருத்துவம் பார்த்து வந்தார். இவர் இயற்கை மருத்துவ முறையில் நானோ தொழில் நுட்பத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமென விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் 3 முதல் 7 நாட்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமெனவும், 30 நாட்களில் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் செயழிலப்பு, இருதய அடைப்புகள் சரி செய்யப்படுமெனவும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோவை மண்டல சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகர் சோதனை மேற்கொண்டதில் ராபர்ட் சாக்கோ பிஏ பொருளாதாரம் படித்து விட்டு, மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராபர்ட் சாக்கோவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மண்டல சுகாதார பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகர் கூறுகையில், "டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் எழுந்துள்ள அச்சத்தை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக பணம் வசூலித்து வருகின்றனர். இதுபோன்ற மருத்துவர்களிடம் சென்று ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் டெங்கு நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், நடப்பாண்டில் இதுவரை 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...