கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இந்து இளைஞர் முன்னணி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. அஜித்குமார் தலைமையில் அரசு பள்ளிகள் மேம்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் அரசினர் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை ஆண், பெண் பள்ளிகள் என மொத்தம் 1212-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் பல இடங்களில் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் இருப்பதாகவும், இதனால் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தொடக்கப் பள்ளிகளில் இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலை தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பல அரசு பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதிகளில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி கட்டிடங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உடனடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் கணிப்பொறி, வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வக உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை அரசு சார்பில் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...