மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.,13) நடந்தது. 

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், உத்தரவின்பேரில், துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டலம் மற்றும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்படுகின்ற டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி ஆணையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் கேட்டறிந்தார். 

அப்போது, டெங்கு தடுப்பு குழுவினர் வழக்கமாக வீடுவீடாக சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், அதிகமாக காய்ச்சல்  உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார். 

டெங்கு தடுப்பு குழுவினர் பணிகள் மேற்கொள்ளும் போது  டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தொடர்ந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். சுகாதார ஆய்வாளர்கள் தங்கள் வார்டுகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு வளாகங்கள், தனியார் வளாகங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொண்டு தேவையான இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

முக்கியமாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளின் போது கொசு உற்பத்தியாகும் இடங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...