"தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க தனிப்படை"

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் புதிய ஆடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் பண்டிகை காலங்களில் புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அவ்வாறு திரளும் மக்களிடம் மர்ம நபர்கள் சிலர் பிக்பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை மாநகர குற்றபிரிவு துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- ஒரு தனிப்படையில் ஆறு போலீசார் வீதம் மொத்தம் இரண்டு தனிப்படையில் 12 போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சாதராண பொதுமக்கள் போல உடையணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள். இதன்மூலம், திருட்டு சம்பங்களில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடிக்க முடியும். 

இதேபோல, கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க நான்கு பேர் கொண்ட தனிப்படையும், இரு சக்கர வாகனங்களை திருடுபவர்களை பிடிப்பதற்கு மூன்று பேர் கொண்ட தனிப்படையும், செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தனை தனிப்படை போலீஸார்களும் மாநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். என்று அவர் கூறினார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...