9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இன்று (அக்.,14) அதிகாலை விவசாய நிலத்துக்குள் உடல்நலக்குறைவால் சுருண்டு விழுந்த காட்டு யானை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடைப் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அச்சுறுத்தி வருகின்றன . இந்த நிலையில், இன்று (அக்.,14) அதிகாலை யானைக் கூட்டங்கள் மதுக்கரை சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்செய்துவந்தன. 

அப்போது, அதில் ஒரு பெண் யானை ஒன்று உடல்நலகுறைவால் விவசாய நிலத்திலேயே சுருண்டு விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் யானையை எழுப்பி, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். எந்த முயற்சியும் பலனளிக்காததால், மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான வனத்துறையின் மருத்துவக்குழு விரைந்து வந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

சுமார் 9 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, கிரேனின் உதவியுடன் 40-வயது மதிக்கத்தக்க அந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானையை காப்பாற்றிய வனத்துறையின் மருத்துவக் குழுவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் பெரியநாயக்கன்பாளையம் பாலமலைப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க யானைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...