கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் - கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் அளித்திருப்பது கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கயிறு கண்காட்சியில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் கோவை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில், கயிறு தொழிலில் உள்ள பல நுட்பமான விஷயங்கள் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியவை குறித்து கண்காட்சி மூலம் அறிய முடிந்தது. இதன்மூலம் கயிறு பொருட்கள் ஏற்றுமதி பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கயிறு பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.1,630 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.2,860 கோடியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் ரூ.20,000 கோடி என்ற அளவுக்கு மாறி மிகப்பெரிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறும். மேலும், கடுமையான வறட்சி காரணமாக இந்த ஆண்டு கயிறு உற்பத்தி மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும். சர்வதேச அளவில் 80 சதவீதத்தை தக்க வைத்து இந்தியா முன்னனியில் உள்ளது. 

இதேபோல, நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை கயிறு வாரியம் என்றாலே கடந்த ஆண்டு வரை ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை இந்த ஆண்டு ரூ.500 கோடியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.  கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து கயிறு பொருட்கள் உற்பத்தியில் கூட்டு முயற்சிக்கு ஜப்பானியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  முதல் முறையாக ஜப்பானின் ஆர்டர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....