சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைப்பு

வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சேலம், ஜோலார்பேட்டை மார்க்கத்தில் புத்திரெட்டிபட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், சேலம், ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், 

செவ்வாய்கிழமை (அக்., 24, 31 மற்றும் நவம்.,07) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

 

ரயில் எண் : 22815, பிலாஷபூர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

புதன்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

பிற ரயில்களின் தாமதத்தினால், ரயில் எண் : 22619, பிலாஷபூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து பிலாஷபூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

வியாழக்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

ரயில் எண் : 12970, ஜெய்ப்பூர் கோவை எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

இதேபோல, 16360, பாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 10 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 10 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை (அக்.,22, 29 மற்றும் நவம்.,05) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

ரயில் எண் : 07115, ஐதராபாத் கொச்சிவெலி சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. 

இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....